states

12 வயது மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர்....

இந்தூர்:
மத்திய பிரதேசத்தின் இந்தூர்நகரில் மண்பூர் என்ற கிராமத்தில்உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவி (12)-க்கு வைபவ் நாயக் என்ற ஆசிரியர்  காதல் கடிதம் கொடுத்துஉள்ளார். அவரைப் பின்தொடர்ந்து சென்று துன்புறுத்தியும் வந்துள்ளார்.  காதலை ஏற்கமறுத்து விட்டால் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டியும் உள்ளார்.

இதுபற்றி தெரிய வந்த கிராமவாசிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர். அவர்கள் அந்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து, முகத் தில் கரியை பூசியுள்ளனர்.  பின்னர் அவரை தெரு வழியே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.இந்த வழக்கில் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மாணவி தந்தை கூறுகையில், “ சம்பவத்தை நினைத்து என் மகள் பயந்துபோனார்.  இரண்டு முறைமயக்கமடைந்தார். மகளுக்கு 2.5 வயதாக இருந்தபோது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு நெஞ்சு வலி இருந்தது. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்” நான் என்னவென்று விசாரித்தபோது விவரங்களை தெரிவித்தார்” என்றார்.மாணவி ஆசிரியரிடம் டியூசன் படிக்கச் சென்றுள்ளார். அவரது நடத்தை சரியில்லாததால் அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டியூசனிலிருந்து விலகிவிட்டார். இருப்பினும் ஆசிரியர்தொடர்ந்து மாணவிக்குதொல்லை தந்து வந்துள்ளார்.

;